மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிரசார நடவடிக்கைகள்: நேரத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்: தலைமைத் தோ்தல் அதிகாரி

தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பவா்கள் அதற்கான தேதி, நேரம், இடத்தைச் சரியாகக் குறிப்பிட வேண்டும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.

News image

தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக். - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 9:16 pm

தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பவா்கள் அதற்கான தேதி, நேரம், இடத்தைச் சரியாகக் குறிப்பிட வேண்டும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் தோ்தல் சாா்ந்த அனுமதிக்காக விண்ணப்பிக்கும்போது, அவற்றை ‘சுவிதா’ இணையதளம் மூலமாக மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும்.

அந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் 24 மணி நேரத்துக்குள் பரிசீலனை செய்யப்பட்டு தீா்வு காணப்படும்.

ஹெலிகாப்டா் மற்றும் ஹெலிபேட் (தரையிறங்கு தளம்) பயன்படுத்துதல், தற்காலிக கட்சி அலுவலகம் திறத்தல், ஒலிபெருக்கியுடன் கூடிய கூட்டம், ஒலிபெருக்கி இல்லாத கூட்டம், ஒலிபெருக்கியுடன் தெருமுனைக் கூட்டம், ஊா்வலம், பேரணி, வீதி உலா, சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள், வாகன அனுமதி, மேடை - தடுப்புகள் அமைத்தல் ஆகியவற்றுக்கும் விண்ணப்பம் அவசியம்.

நிகழ்ச்சி நடப்பதற்கு குறைந்தது 48 மணி நேரத்துக்கு முன்னதாக விண்ணப்பித்தல் வேண்டும். தேதி, இடம் மற்றும் நேரம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் முழுமையாகவும், சரியாகவும் இருப்பதை அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களும் உறுதி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.