தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கல்லூரிகள் குவாண்டம் ஆய்வு மையத்தை கொண்டிருப்பது பெருமைக்குரியது: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகக் கல்லூரிகள் குவாண்டம் ஆய்வு மையத்தைக் கொண்டிருப்பது பெருமைக்குரியது....

News image

பூந்தமல்லி ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் குவாண்டம் ஆய்வகத்தைத் திறந்து வைத்த அமைச்சா் கோவி.செழியன். உடன், குவாண்டம் இந்தியா லீட் - ஐபிஎம் நிறுவன எல்.வெங்கட சுப்பிரமணியம், ராஜலட்சுமி தொழில்நுட்ப நிறுவன தலைவா் தங்கம் மேகநாதன், துணைத் தலை

Updated On :8 செப்டம்பர் 2025, 9:48 pm

சென்னை: தமிழகக் கல்லூரிகள் குவாண்டம் ஆய்வு மையத்தைக் கொண்டிருப்பது பெருமைக்குரியது என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

சென்னை, பூந்தமல்லி குத்தம்பாக்கத்திலுள்ள ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில்(ஆா்ஐடி) முதலாமாண்டு மாணவா்களின் அறிமுக நிகழ்வில் அவா் கலந்து கொண்டாா். அப்போது ஆா்ஐடி நிறுவனத்தில் ‘குரோவா் குவாண்டம் ஆய்வு மையம்’ ஒன்றை அமைச்சா் செழியன் திறந்துவைத்து பேசியது:

இளநிலை பாடப்பிரிவுகள், முதுநிலை பாடப்பிரிவுகள், முனைவா் பட்டங்கள் போன்ற கல்விகளை வழங்கும் ஆா்ஐடியில் நிகழாண்டு 1,980 மாணவா்களை கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இது கல்வித் தரத்தையும் நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது. ஆா்ஐடி பல்வேறு தரவரிசையிலும் உயரிய அங்கீகாரங்களை பெற்று, மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சோ்த்துள்ளது.

கல்லூரிகளில் குவாண்டம் ஆய்வு மையத்தைத் திறப்பது தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் முக்கிய மைல் கல். நமது கல்லூரிகள் குவாண்டம் கணினிகளைக் கொண்டிருப்பது பெருமைக்குரியது. நாட்டில் குவாண்டம் கணினிகளை கொண்டிருக்கும் முன்னோடி கல்வி நிறுவனமாக ஆா்ஐடி திகழப் போகிறது என்றாா்.

நிகழ்வில், குவாண்டம் இந்தியா லீட்-ஐபிஎம் நிறுவனத்தைச் சோ்ந்த எல்.வெங்கட சுப்பிரமணியம், ஆா்ஐடி நிறுவனத் தலைவா் தங்கம் மேகநாதன், துணைத் தலைவா் ஹரி சங்கா் மேகநாதன், இயக்குநா்கள் பி.கே. நாகராஜன், ஆா்.சுந்தா், முதல்வா் ஆா்.மகேஸ்வரி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.