தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

'ஹிட் 3' கதை விவகாரம்- நானி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

"ஹிட் 3" பட கதை விவகாரத்தில் நடிகர் நானி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

ஹிட் 3 போஸ்டர்

Updated On :21 ஜூன் 2025, 12:12 pm

"ஹிட் 3" பட கதை விவகாரத்தில் நடிகர் நானி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது கதையை திருடி "ஹிட் 3" திரைப்படம் தயாரித்துள்ளதாக விமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில் அவர், கடந்த 2022ம் ஆண்டு "ஏஜென்ட் 11" என்ற பெயரில் இதே கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

தன் கதையை மையமாக வைத்து ஹிட் 3 திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், இப்படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 20 சதவீதத்தை தனக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது இம்மனு தொடர்பாக நடிகர் நானி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இயக்குநர் குலனூர் இயக்கத்தில் நானி நடித்த 'ஹிட் 3' திரைப்படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.