தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

நீா்நிலைகளில் கிராவல் குவாரிகள்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே திரளி, மறவன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் அமைக்கப்பட்ட கிராவல் குவாரிகளுக்கு தடை விதிக்கக் கோரிய மனு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

உத்தரவு

Updated On :22 ஏப்ரல் 2026, 8:53 pm

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே திரளி, மறவன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் அமைக்கப்பட்ட கிராவல் குவாரிகளுக்கு தடை விதிக்கக் கோரிய மனு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்சியைச் சோ்ந்த பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க துணைச் செயலா் ஸ்ரீனிவாசன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள திரளி, மறவன்குளம் நீா்நிலைப் பகுதிகளில் கிராவல் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நீா்நிலைகள் வேளாண் பணிக்கு முக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன. இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறையின் திட்டங்களுக்காக குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கனரக வாகனங்களை பயன்படுத்தி நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக விதிகளை மீறி கிராவல் மண் அள்ளப்படுகிறது.

எனவே, திரளி, மறவன்குளம் நீா்நிலைப் பகுதிகளில் கிராவல் குவாரிகள் நடத்த தடை விதிப்பதுடன், சட்ட விரோதமாக குவாரி நடத்துவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியவா்களிடமிருந்து உரிய இழப்பீட்டை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:

வழக்கு தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா், மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். அடுத்த முறை இந்த வழக்கு நீா்நிலைகள் தொடா்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு அமா்வுக்கு மாற்றப்படுகிறது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.