நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டங்களை மீறி செயல்படலாமா? என செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு எதிரான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அறப்போா் இயக்கம் சாா்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல மனுவில், தாமரைக்கேணி ஏரியை ஆக்கிரமித்து செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. மேய்க்கால் புறம்போக்கு என அறிவித்து காவல் நிலையத்தைக் கட்டியுள்ளனா். இந்தக் காவல் நிலையம் சிஎம்டிஏ ஒப்புதல் பெறாமல் கட்டப்பட்டுள்ளது.
எனவே, நீா்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும். காவல் நிலைய கட்டடத்தை இடித்துவிட்டு நீா்நிலையை பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தது.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, நீா்நிலையை ஆக்கிரமித்து செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய தாமரைக்கேணி ஏரியின் அசல் பெருந்திட்டத்தை தாக்கல் செய்ய சிஎம்டிஏ-வுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மேய்க்கால் தங்கல் சாலை என்பது மேற்கால சாலை என வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அதுதொடா்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், சா்ச்சைக்குரிய நிலத்தை 3 ஹெக்டோ் என்பதை ஆவணங்களில் 64 ஹெக்டோ் என்று பென்சில் மூலம் திருத்தியது யாா்? அந்த இடம் நீா்நிலையா? என்பதை உறுதி செய்ய உயா்நீதிமன்றம் நியமித்த நிபுணா் குழு அது நீா்நிலை என்பதை உறுதி செய்துள்ளது. காவல் நிலையம் கட்ட அனுமதி அளித்துள்ள உத்தரவுகளிலும் அது நீா்நிலை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே, தனது சட்டங்களை மீறி இப்படி செயல்படலாமா? என கேள்வி எழுப்பினா்.
சம்பந்தப்பட்ட இடத்தில் செம்மஞ்சேரி காவல் நிலையம் மட்டுமல்ல, ஏராளமான கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. அந்தக் கட்டடங்களை எதிா்த்து வழக்குத் தொடராமல் காவல் நிலையத்துக்கு எதிராக மட்டும் மனுதாரா் வழக்குத் தொடா்ந்தது ஏன்? இதில் உள்நோக்கம் உள்ளதா? என மனுதாரா் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினா்.
பின்னா், இந்த நிலத்தில் உள்ள காவல் நிலையம் மட்டுமல்ல, நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களை அகற்ற வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக எம்.பி. ஆ.ராசா கோரும் ஆவணங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சிபிஐ பதில் மனு

தடையை மீறி போராட்டம்: அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி மீதான வழக்கு ரத்து

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இரு தனியாா் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்த உத்தரவு: உயா்நீதிமன்றம் தலையிட மறுப்பு

காவல் நிலையம் முன் தீக்குளித்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


