தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சகோதரர் காலமானார்

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சகோதரர் எம்.ராமகிருஷ்ணன்(82)உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

News image

எம்.ராமகிருஷ்ணன்

Updated On :3 மார்ச் 2024, 1:44 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 69 ஆவது மடாதிபதியாக இருந்து மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சகோதரர் எம்.ராமகிருஷ்ணன்(82)உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 69 ஆவது மடாதிபதியாக இருந்து மறைந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.இவரது பூர்வாசிரம சகோதரர் எம்.ராமகிருஷ்ணன்(82)சிவபதம் அடைந்தார். இவர் சங்கரா கல்வி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றி 30-க்கும் மேற்பட்ட சங்கரா பள்ளிகளை தொடங்கி நிர்வாகம் செய்து வந்தார்.

மேலும் காஞ்சி சங்கரமடத்தின் வேறு சில அறக்கட்டளைகளிலும் இயக்குநராக இருந்து ஏழை,எளிய மக்களுக்கு சேவையாற்றியவர். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

இவரது இறுதிச் சடங்குகள் சென்னையில் துரைப்பாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. தொடர்புக்கு-98409 20505

இவரது மறைவையடுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், கச்சபேசுவரர் ஆகிய கோயில்களில் மோட்ச தீபதமும் ஏற்றப்பட்டதாகவும் காஞ்சி ஸ்ரீ மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.