15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திருவொற்றியூர் ஸ்ரீ பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

News image

திருவொற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீ வலிமிகநாதர் சுவாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :22 ஏப்ரல் 2024, 7:33 am

திருவாடனை அருகே திருவொற்றியூர் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா இன்று தேரோட்டம் நடைபெற்றது

திருவாடானை அருகே திருவொற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபாகம்பிரியாள் சமேத வலிமிக நாத சுவாமி திருக்கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

Story image

அதனை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் சுவாமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றன. பின்னர் சுவாமி அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 18ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 22ஆம் தேதி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து வந்து கோயிலை நிலை நிறுத்தினார்கள். செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடையும் விழாக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ சரக கண்காணிப்பாளர் செந்தில் குமார் கௌரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மணிகண்ட குருக்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கண்ணன் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.