டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

முடிவை திடீரென மாற்றிக் கொண்ட ஃபோர்டு: அதிர்ச்சியில் ஊழியர்கள்

ஃபோர்டு நிறுவனம் மின்சார வாகனத் தயாரிப்பை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், அந்த முடிவும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

News image
முடிவை திடீரென மாற்றிக் கொண்ட ஃபோர்டு: அதிர்ச்சியில் ஊழியர்கள்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:14 am

IANS


சென்னை: இந்தியாவில் சென்னை உள்ளிட்ட இரண்டு தொழிற்சாலைகளிலும் கார் உற்பத்தியை நிறுத்துவது என முடிவு செய்த ஃபோர்டு நிறுவனம் மின்சார வாகனத் தயாரிப்பை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், அந்த முடிவும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

ஃபோர்டு தொழிற்சாலைகளில் மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் முடிவை கைவிட்டிருப்பதாக அறிவித்திருக்கும் ஃபோர்டு இந்தியா தனியார் நிறுவனம், ஊழியர்களுடன் நிவாரணத் தொகை குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஃபோர்டு இந்தியா சங்கம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்திருப்பதாவது, ஃபோர்டு நிர்வாகம், அதன் தொழிலாளர்களிடம், மின்சார வாகனங்கள் தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துவிட்டது. ஃபோர்டு தொழிற்சாலைகளை மூடுவதால், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக ஊழியர்கள் சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மற்றும் சென்னையில் உள்ள இரண்டு ஃபோர் தொழிற்சாலைகளிலும் மின்சார வாகனங்கள் தயாரிக்கும் பணியை தொடங்குவது என்று ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டதைத் தொடர்ந்து, நிவாரணத் தொகை குறித்து ஊழியர்கள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, சென்னையில் உள்ள ஃபோர்டு நிறுவனம் வரும் ஜூன் மாதம் மூடப்படும் என்று தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.