நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:51 am

DIN

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன் பிடித்துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் சிலர் மீன்வளத்துறை அலுவலகத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு மீன்வர் ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகுகளில் கரையூரை சேர்ந்த பாலமுருகன், அந்தோணி, அர்ஜூனன், தங்கப்பாண்டி, தங்கச்சிமடத்தை சேர்ந்த மடுகு பிச்சை, சிவகாமி நகரைச் சேர்ந்த ராஜா ஆகிய 6 பேர்  மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 

அவர்கள் மன்னார் கடற்பரப்பில் புதன்கிழமை இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, 6 பேரை கைது செய்து, அவா்களின் படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனா்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை தலைமன்னாருக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவா்களை விரைந்து மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.