சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக்க அறிவிக்கை வெளியீடு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்காக தமிழக அரசு பொது அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:36 pm

ANI

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்காக தமிழக அரசு பொது அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

அதையடுத்து அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள “வேதா நிலையம்” இல்லத்தை நினைவில்லமாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது.

இதையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த வீடான “வேதா நிலையம்” இல்லம் நினைவில்லமாக்கப்படும் என்றும், அரசு அதற்கான நிலம் கையகப்படுதுதல் பணிகளைத் துவக்கும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்காக தமிழக அரசு புதனன்று பொது அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி நினைவில்லம் உருவாக்குவதற்காக நிலம் கையகப்படுத்தபடுவதாகவும், இதன்காரணமாக அந்தப்பகுதியில் எந்த குடும்பமும் வெளியேற வேண்டிய அவசியம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.