கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

கணவர் இறந்த சோகம்: நினைவு நாளில் மனைவி, மகன் தற்கொலை

கடலூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் அவரது மனைவி மற்றும் மகன் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:44 pm

DIN

கடலூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் அவரது மனைவி மற்றும் மகன் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் கோண்டூர் சாய்பாபா நகரைச் சேர்ந்தவர் முத்து ரெட்டியார் (67). இவர் கடந்த 3-6-2019 அன்று உடல் நிலை சரியில்லாமல் இறந்தார். இந்நிலையில் அவரது திதிக்கான ஏற்பாட்டினை அவரது மனைவி லதா (61), மகன் சேதுராமன் (26) ஆகியோர் செய்து வந்தனர். 

Story image

இன்று திதி வழங்க இருந்த நாளில் அவர்கள் இருவரும் வீட்டில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து இறந்த நிலையில் கிடந்தனர். இதனைக்கண்ட வீட்டின் உரிமையாளர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை இருவரது சடலங்களையும் மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

கணவர் இறந்த நாளிலிருந்து குடும்பத்தினர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அதனால் அவரது நினைவு நாளில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.