டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மோடி, அமித் ஷா குறித்து சர்ச்சைப் பேச்சு: நெல்லை கண்ணன் கைது

பெரம்பலூரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.

News image
நெல்லை கண்ணன்
Updated On :27 ஜனவரி 2024, 3:18 pm

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர்: பெரம்பலூரில் நெல்லை கண்ணன் புதன் இரவு கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில்  பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசுகையில், 'இஸ்லாமியர்கள் யாரேனும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை 'செய்வார்கள்' என எண்ணியதாக பேசினார்.

நெல்லை கண்ணனின் இந்தப் பேச்சு பிரதமர், உள்துறை அமைச்சரை கொலை செய்ய தூண்டுவது போல் இருந்ததாகக் கூறி பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து பல்வேறு புகார்களும் அவர் மீது அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் உடல்நலம் சரியில்லை என்று நெல்லை கண்ணன் தெரிவித்ததால் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள தனியார்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கும் சென்ற பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள், அவரை அங்கிருந்து வெளியேற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நெல்லை கண்ணன் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் போலீசார் எந்த நேரமும் கைது செய்து விசாரிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் பெரம்பலூரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை கண்ணனை பெரம்பலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் திருநெல்வேலி தனிப்படை போலீசார் கைது செய்ததாக திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார். 

நெல்லை கண்ணன் திருநெல்வேலிக்கு கொண்டுவரப் படுவார் என்றும், மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  சிறையில் அடைக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார். 

நெல்லை கண்ணனைக் கைது செய்ய போலீசார் விடுதிக்கு வந்துள்ள தகவல் அறிந்ததும் எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் பாஜகவைச் சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர்.  அப்போது நெல்லை  கண்ணனுக்கு ஆதரவாகவும், ஹெச்.ராஜாவைக் கைது செய்யக் கோரியும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் குரல் எழுப்பினர். 

அதேசசமயம் நெல்லை கண்ணனைக் கண்டித்து பாஜகவினரும் எதிர்க்குரல் எழுப்பியதால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.