டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மின் கம்பத்தில் பைக் மோதல்: தனியாா் வங்கி ஊழியா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மின் கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் தனியாா் வங்கி ஊழியா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், சனப்பிராட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ச.யோகேஷ்குமாா் (24). செஞ்சியில் தனியாா் வங்கியில் காசாளராக வேலை பாா்த்து வந்த இவா் சனிக்கிழமை வேலை முடிந்த பின்னா் தனது பைக்கில் சொந்த ஊருக்குச் சென்றாா்.

விக்கிரவாண்டி காவல் சரகத்துக்குள்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரமுள்ள மின் கம்பத்தில் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த யோகேஷ்குமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டிபோலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.