டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைக்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய முன்னாள் அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

News image
பொன் ராதாகிருஷ்ணன்
Updated On :27 ஜனவரி 2024, 3:48 pm

DIN

நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைக்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய முன்னாள் அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றார். 

தொடர்ந்து, நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை. விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைக்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்தார்.

மேலும், ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அதன் பிறகு அவரது  கொள்கைக்கு ஏற்ப கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.