/

ரஜினியும் கமலும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள்: மன்னார்குடி ஜீயர் கருத்து! 

ரஜினியும் கமலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள் என்று மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் கருத்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:31 pm

DIN

திருவாரூர்: ரஜினியும் கமலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள் என்று மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் கருத்து தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் திங்களன்று திருவாரூர் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

திராவிடம் என்பது இந்து விரோதம் அல்ல; திராவிடம் என்பது வேறு; இந்து விரோதம் என்பது வேறு. ஆனால்  சிலர் திராவிடம் என்ற பெயரில் இந்து விரோதம் செய்கின்றனர். வெளியே இந்து விரோதம் பேசி வெறுப்பைத் தூண்டுகின்றனர். ஆனால் உள்ளே இந்து தெய்வங்களை வணங்குகின்றனர்.

தங்களது அரசியல் பயணத்தில் ரஜினியும் கமலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். இந்து விரோதிகளல்ல.

ஆண்டாள் விவகாரத்தினைப் பொறுத்த வரை வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.