சென்னை விமான நிலையம் அருகே பொதுமக்கள் முன்பு அடிதடியில் ஈடுபட்ட காவலர்கள்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்கள் திடீரென பொதுமக்கள் முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்கள் திடீரென பொதுமக்கள் முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மீனம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் துணை ஆய்வாளர் கெல்வின் வாகன தணிக்கைப் பணிக்கு அமர்த்தப்பட்டார். அவர் தலைமைக் காவலர் தட்சிணாமூர்த்தியை குடித்து விட்டு வாகனம் ஓட்டி வருகிறார்களா என்பதை ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறார்.
தட்சிணாமூர்த்தி, மற்றொரு தலைமைக் காவலர் கோபிநாத்துக்கு பணியை மாற்றியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது.
தட்சிணாமூர்த்தியை, கோபிநாத் தனது வாக்கி டாக்கியால் தாக்கியதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக, உயர் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்து, தட்சிணாமூர்த்தியை மருத்துவமனையில் சேர்த்தனர். கெல்வின் பணிக் காத்திருப்பில் வைக்கப்பட்டார். கோபிநாத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...