நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ஐபிஎல் போட்டிகளுக்கு குரல் கொடுக்கும் 'அந்த' 100 பேர்: ரூ. 1.7 லட்சம் ஊதியத்துடன் ஒப்பந்தம்!

ஏப்ரல் 7-ஆம் தேதி 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அதற்காக குரல் கொடுக்க 100 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:39 pm

Raghavendran

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எனவே அவர்கள் முடிந்தவரை அதிகளவிலான மக்களிடம் இப்போட்டித் தொடரை கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தற்போது இதற்கென 100 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஆங்கிலம் மட்டுமல்லாது இந்தியாவிலுள்ள பிற மொழிகளிலும் தங்கள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர். குறிப்பாக தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடத்தி வருகின்றன. எனவே ஐபிஎல் போட்டிகளை இதற்கான மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கும் விதமாக இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் அடிப்படையில் இந்த ஒவ்வொரு மொழிக்கும் என்று பிரத்தியேகமான வர்ணனையாளர்களை ஸ்டார் நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இதில் அனுபவம் மட்டுமல்லாது புதுமையும் இடம்பெறுகிற வகையில் வர்ணனையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இம்முறை நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் அந்தந்த மாநில மொழிகளிலேயே கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், சுனில் கவாஸ்கர் தவிர மற்றவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் ரூ. 1.7 லட்சம் ஊதியத்துடன் ஸ்டார் நிறுவனம் இவர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் உலகளவிலான ஒளிபரப்புக்கான ஆங்கில வர்ணனையாளர்களாக 17 பேரை நியமித்துள்ளது. இவர்களில் 8 பேர் இந்தியர்கள்.

மைக்கெல் வான், நாசர் ஹுசைன், டேவிட் லாய்ட் ஆகியோர் இந்த வர்ணனையாளர்கள் குழுவில் முதல்முறையாக இடம்பெற்றுள்ளனர். மெல் ஜோன்ஸ், அன்ஜும் சோப்ரா, இஷா குஹா, லிசா கார்ப்ரினி ஸ்தாலேகர் ஆகிய 4 பெண் வர்ணனையாளர்கள் இடம்பிடித்துள்ளனர். 

சுனில் கவாஸ்கர் (ஆங்கிலம், ஹிந்தி), முரளி கார்த்திக் (ஆங்கிலம், ஹிந்தி), லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் (ஆங்கிலம், தமிழ்) உள்ளிட்டோர் மட்டுமே இரு மொழிகளுக்கு வர்ணனையாளர்களாக இடம்பெற்றுள்ளனர். மேலும், சமகாலத்தில் கிரிக்கெட் விளையாடி வரும் அபினவ் முகுந்த் (தமிழ்), அபிஷேக் நாயர் (ஹிந்தி), அஷோக் டிண்டா (வங்காளம்), ஆர்.பி.சிங் (ஹிந்தி), இர்ஃபான் பதான் (ஹிந்தி), முகமது கைஃப் (ஹிந்தி), பிரக்யான் ஓஜா (ஹிந்தி) ஆகியோரும் இந்த வர்ணனையாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.