தமிழகத்தில் விசைத்தறியின் வரலாறு 1928-லிருந்து துவங்குகிறது. அப்போது 6 தறிகளுடன் ஆரம்பித்தது. தற்போது 5 லட்சம் தறிகள் இயங்குகின்றன. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 15 லட்சம் பேர் இத்தொழிலில் உள்ளனர். தமிழகத்தில் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் இத்தொழில் பரவி உள்ளது. நெல்லை மாவட்டம்
சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, சத்திரம்பட்டி பகுதியிலும் விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. தமிழகத்தில் 24,000 விசைத்தறிகளை உள்ளடக்கிய 142 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு
சங்கங்கள் உள்ளன. இவற்றில் மட்டும் ரூ.20 கோடி அளவுக்கு
கொள்முதல் நடைபெறுகிறது.