தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அரவக்குறிச்சி அருகே கார் விபத்து: கர்நாடகாவைச் சேர்ந்த வியாபாரிகள் 2 பேர் பலி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நிகழ்ந்த கார் விபத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு துக்கம் விசாரிக்க வந்த கடலை மிட்டாய் வியாபாரிகள் 2 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Updated On :18 அக்டோபர் 2016, 8:46 am

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நிகழ்ந்த கார் விபத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு துக்கம் விசாரிக்க வந்த கடலை மிட்டாய் வியாபாரிகள் 2 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கடலை மிட்டாய் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 4 பேர், தூத்துக்குடிக்கு துக்கம் விசாரிக்க காரில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களது கார் இன்று அதிகாலை 6.30 மணியளவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி சாலையோர தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்ததில் கடலை மிட்டாய் வியாபாரிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்தில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவர் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.