பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

சென்னையிலோ கடும் வெயில்: தூத்துக்குடி, தேனியில் மழை

சென்னை உள்ளிட்ட தமிழத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடுமையான வெப்பம் வாட்டி வரும் நிலையில், தூத்துக்குடியில் நேற்று மழை பெய்துள்ளது.

Updated On :7 ஏப்ரல் 2016, 9:56 am

சென்னை :  சென்னை உள்ளிட்ட தமிழத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடுமையான வெப்பம் வாட்டி வரும் நிலையில், தூத்துக்குடியில் நேற்று மழை பெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் புதன்கிழமை சுமார் 45 நிமிடங்கள் இடி, மின்னலுடன் கூடிய மழை  பெய்தது.

கழுகுமலையில் சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், புதன்கிழமை மாலை 6 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணிக்கு இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இம் மழை சுமார் 45 நிமிடம் நீடித்தது.

இதே போல, உதகமண்டலம், தேனி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பதிவாகியுள்ளது.

இதே போல, குமரி மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ஆனைக்கிடங்கில் 111 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.