ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திருச்சியில் இந்திய கம்யூ. 13 இடங்களில் மறியல்:  459 பேர் கைது

நிலம் கையகச் சட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசைக் கண்டித்தும், இந்த முடிவை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:31 am

சி.சண்முகவேல்

நிலம் கையகச் சட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசைக் கண்டித்தும், இந்த முடிவை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் 13 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 459 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி தெப்பக்குளம் அஞ்சல் நிலையம் முன்பு மாநகர மாவட்டச் செயலர் சுரேஷ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 52 பேரை கோட்டை போலீஸார் கைது செய்தனர்.

சோமரசம்பேட்டை...

மாநகர மாவட்ட துணைச் செயலர் பேரூர் நடராஜன் தலைமையில் சோமரசம்பேட்டை கடைவீதி முன்பு மறியலில் ஈடுபட்ட 24 பெண்கள் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவெறும்பூர்...

திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வட்டார குழு உறுப்பினர் பழனிவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரை திருவெறும்பூர் போலீஸôர் கைது செய்தனர்.

மணப்பாறை...

ஒன்றியச் செயலர் தங்கராசு தலைமையில்,மாவட்டச் செயலர் இந்திரஜித் முன்னிலையில் 108 பேரும், வளநாடு கைகாட்டியில், ஒன்றியச் செயலர் பாலு தலைமையில் 17 பேரும், வையம்பட்டியில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜெயலட்சுமி தலைமையில் 29 பேரும் கைது கைதானர்கள்.

முசிறியில்.... கட்சியின் முசிறி ஒன்றிய செயலாளர் வி.பி. சண்முகம் தலைமையில் கைகாட்டியில் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 27 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

லால்குடி...

வட்டாரக் குழு உறுப்பினர் பழனிமுருகன் தலைமையில் திருச்சி-சிதம்பரம் சாலையில் மறியல் ஈடுபட்ட 25 பேரை லால்குடி போலீஸார் கைது செய்தனர்.

துறையூர்....

ஒன்றியச் செயலர் செல்வம் தலைமையில் 24 பேரும், உப்பிலியபுரத்தில், ஒன்றியச் செயலர் ரவி தலைமையில் 20 பேரும் கைதானர்கள். புறநகர் பகுதியில் 12 இடங்களில் கைதான 407 பேரும், மாநகரில் கைதான 52 பேரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.