டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பெண் எஸ்.ஐ.க்கு மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்தது சரியே: உயர் நீதிமன்றம்

மின்வாரிய ஊழியரை தாக்கிய வழக்கில், பெண் உதவி ஆய்வாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்தது சரியே என சென்னை உயர் நீதமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:47 am

PTI

மின்வாரிய ஊழியரை சட்ட விரோதமாக அடைத்து வைத்து தாக்கிய வழக்கில், பெண் உதவி ஆய்வாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்தது சரியே என சென்னை உயர் நீதமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

மதுரை மின்வாரிய அலுவலத்தில் மின் கணக்கீடு பணியாளராகப் பணியாற்றி வருபவர் பாலுதாய். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தையை கடத்தியது தொடர்பாக இவரை கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி தல்லாக்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஷோபனா கைது செய்தார்.

பின்னர் அவரை நான்கு நாள்களாக சட்ட விரதோமாக காவலில் அடைத்து வைத்து சித்தரவதைப்படுத்தினாராம்.

இதையடுத்து பாலுத்தாய் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டார். மனுவை விசாரித்த ஆணையம், உதவி ஆய்வாளர் ஷோபனா, பாலுதாய்க்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டது.

மேலும், அத்தொகையை தமிழக அரசு வழங்கவும், பின்னர் அப்பணத்தை ஷோபனாவின் வருமானத்தில் பிடித்து கொள்ளவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஷோபனா செனனை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் என். கிருபாகரன் ஆகியோர், ஷோபனாவின் மனுவை தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.