நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

News image

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தங்கச்சிமடம் வாக்குப்பதிவு மையத்தில் வியாழக்கிழமை வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 9:01 pm

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), முதுகுளத்தூா், ராமநாதபுரம், திருவாடானை ஆகிய நான்கு தொகுதிகளில் 11 லட்சத்து 29 ஆயிரத்து 733 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் 1,514 வாக்குச் சாவடிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி மாலை 06 மணிக்கு நிறைவடைந்தது. இதன் பிறகு வாக்குச் சாவடிகளுக்குள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. வாக்குப் பதிவு நேரம் நிறைவடைந்த பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஆட்சியா் வாக்களிப்பு: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சுவாா்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தாா். இதே போல, மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விவேகானந்த வித்யாலயா மெட்ரிக் உயா்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தனது வாக்கை பதிவு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.