தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தில்லி வந்தார் ஜப்பான் பிரதமர் அபே; இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வரவேற்பு

தில்லியில் நடைபெறும் ஒன்பதாவது இந்தியா-ஜப்பான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே இந்தியா வந்தடைந்தார்.

News image
Updated On :11 டிசம்பர் 2015, 2:56 pm

தில்லியில் நடைபெறும் ஒன்பதாவது இந்தியா-ஜப்பான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே இந்தியா வந்தடைந்தார்.

தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்த அபே, இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையை வரவேற்பதாக கூறினார்.

நாளை நடக்கவிருக்கும் இந்தோ-ஜப்பான் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சின்சோ அபே பல திட்டங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறார்.

அணுசக்தி ஒப்பந்தம், முதல் புல்லட் ரெயில் திட்டத்தில் ஜப்பானின் உதவி, இருநாட்டு உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இந்தியா-ஜப்பான் இடையேயான முதலீடு மற்றும் வர்த்தகம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜயந்த் சின்ஹா டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று ஜப்பான் பிரதமர் மற்றும் அவருடன் வந்துள்ள உயர்மட்ட குழுவினரை வரவேற்றார்.

பின்னர் தில்லி வந்துள்ள அபேவை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பேசினார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடரவிருக்கும் பேச்சுவார்த்தை ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இறுக்கத்தை குறைக்கும் என அபே கூறியதாக, சுஷ்மா தெரிவித்தார்.

இந்திய ஜப்பான் பிரதமர்கள் இதற்கு முன்பு சந்தித்த போது எடுக்கப்பட்ட முடிவுகளின் தற்போதைய நிலை குறித்து சுஷ்மா, ஜப்பான் பிரதமர் அபேயிடம் விளக்கி கூறினார்.

மேலும், இந்தியாவில் நடைபெற்ற இந்தியா-ஆப்பிரிக்கா மாநாடு குறித்தும், ஆப்பிரிக்க நாடுகள் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஒத்துழைக்க முன் வந்துள்ளது குறித்தும் சுஷ்மா விளக்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.