தில்லியில் நடைபெறும் ஒன்பதாவது இந்தியா-ஜப்பான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே இந்தியா வந்தடைந்தார்.
தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்த அபே, இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையை வரவேற்பதாக கூறினார்.
நாளை நடக்கவிருக்கும் இந்தோ-ஜப்பான் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சின்சோ அபே பல திட்டங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறார்.
அணுசக்தி ஒப்பந்தம், முதல் புல்லட் ரெயில் திட்டத்தில் ஜப்பானின் உதவி, இருநாட்டு உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இந்தியா-ஜப்பான் இடையேயான முதலீடு மற்றும் வர்த்தகம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜயந்த் சின்ஹா டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று ஜப்பான் பிரதமர் மற்றும் அவருடன் வந்துள்ள உயர்மட்ட குழுவினரை வரவேற்றார்.
பின்னர் தில்லி வந்துள்ள அபேவை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பேசினார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடரவிருக்கும் பேச்சுவார்த்தை ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இறுக்கத்தை குறைக்கும் என அபே கூறியதாக, சுஷ்மா தெரிவித்தார்.
இந்திய ஜப்பான் பிரதமர்கள் இதற்கு முன்பு சந்தித்த போது எடுக்கப்பட்ட முடிவுகளின் தற்போதைய நிலை குறித்து சுஷ்மா, ஜப்பான் பிரதமர் அபேயிடம் விளக்கி கூறினார்.
மேலும், இந்தியாவில் நடைபெற்ற இந்தியா-ஆப்பிரிக்கா மாநாடு குறித்தும், ஆப்பிரிக்க நாடுகள் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஒத்துழைக்க முன் வந்துள்ளது குறித்தும் சுஷ்மா விளக்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைதியாக முடிந்த வாக்குப்பதிவு

சாதனை வாக்குப் பதிவு: முதல்வா் ஸ்டாலின் பாராட்டு

தேனி மாவட்டத்தில் 81 சதவீதம் வாக்குப் பதிவு!

பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


