ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தனியார் வங்கி மேலாளர் காவரியில் மூழ்கினார்

திருச்சி முக்கொம்பு அருகே காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்த தனியார் வங்கி மேலாளர் நீரில் மூழ்கினார். அவரை தீயணைப்பு வீரர்கள் தேடிவருகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:20 am

சி.சண்முகவேல்

திருச்சி முக்கொம்பு அருகே காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்த தனியார் வங்கி மேலாளர் நீரில் மூழ்கினார். அவரை தீயணைப்பு வீரர்கள் தேடிவருகின்றனர்.

சமயபுரம் அருகேயுள்ள கொள்ளிடம் நெ.1 டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் விஸ்வநாதன்(28). லால்குடியிலுள்ள கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 4 மாதங்களாகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இவரும், வங்கி உதவி மேலாளர் சக்திவேல், நண்பர்கள் ராஜ்குமார், பிரவீன் ஆகிய 4 பேரும் முக்கொம்பு சென்றனர். அங்கு பிற்பகல் சாப்பிட்டு விட்டு அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர். அங்கு ஆழம் தெரியாமல் ஆற்றில் இறங்கிய 4 பேரும் நீரில் மூழ்கினர்.

இதையறிந்த அப்பகுதியினர் ஆற்றில் இறங்கி, சக்திவேல்,ராஜ்குமார்,பிரவீன் ஆகிய 3 பேரை மட்டும் உயிருடன் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து ஜீயபுரம் போலீஸாருக்கும், திருச்சி தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் விஸ்வநாதனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாலை வரை விஸ்வநாதன் கிடைக்கவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினர் தேடும் பணியை நிறுத்திவிட்டு திங்கள்கிழமை மீண்டும் தேடும் பணியில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர். இது குறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.