அப்போது பணியாற்றிய போக்குவரத்துத் தொழிலாளர்கள், தலா ரூ.5,000 செலுத்தியிருந்தனர். தொழிலாளர்களின் பங்குத்தொகை, அரசு ஒதுக்கிய தொகை என மொத்தம் ரூ.120 கோடி வைப்புத் தொகை வைக்கப்பட்டு அதில் கிடைக்கும் வட்டியில் இருந்து ஐ.ஆர்.டி.டி. நிறுவனத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி. மருத்துவக் கல்லூரி, சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி, தரமணி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் பாலிடெக்னிக்குகளும் இயங்கி வருகின்றன.