திருப்பூர், ஜூலை 11: கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி மாநில அரசுக்கு பாராட்டு விழா நடத்தினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக் குழு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து கோவிந்தசாமி கூறுகையில், "ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால், அது கட்சிக்கே பலவீனத்தை ஏற்படுத்தும்' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 1968-ல் திருப்பூரில் சிஐடியூ உறுப்பினராக இணைந்த சி.கோவிந்தசாமி, தொழிற்சங்கத்தில் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
1974-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். தொடர்ந்து அக் கட்சியில் மாவட்டக்குழு, மாநிலக்குழு உறுப்பினர், சட்டப்பேரவைக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்தார்.
1986-ல் திருப்பூர் நகராட்சி கவுன்சிலராகவும், 1989-ல் திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் கோவிந்தசாமி பணியாற்றியுள்ளார். 2-வது முறையாக கடந்த 2006-முதல் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
கடந்த 2008-ல் திருப்பூரில் தொழிற்சாலை முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, மாநிலக்குழு உறுப்பினர் மற்றும் சட்டப் பேரவை குழுத்தலைவர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், திருப்பூர் பேரவை தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளதாகத் தெரிவித்து ஆகஸ்டு 1-ல் மாநில அரசுக்கு பாராட்டு விழா நடத்துவதாகவும் அறிவித்துள்ளார்.
கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி பாராட்டுவிழா நடத்தும் பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து, கோவிந்தசாமி கூறியதாவது:
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை தொழிலாளர் பிரச்னைகளில் மட்டும் அதிக அளவில் ஈடுபட்டு வந்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியூ தொழிற்சங்கத்தை, மக்கள் இயக்கமாக மாற்றியதில் பெரும் பங்கு எனக்குண்டு. அதன்பிறகே, இக்கட்சியில் ஏராளமான உறுப்பினர்கள் சேரத் துவங்கினர்.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பனியன் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாகச் சித்தரித்து கட்சியின் மாநிலக்குழு மற்றும் சட்டப்பேரவைக் குழுத்தலைவர் பதவியில் இருந்தும் நீக்கினர்.
அப்போதிருந்தே, திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் பலம் குறையத் துவங்கியது.
இந்நிலையில், மாநில அரசுக்கு பாராட்டு விழா நடத்துவதற்காக என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அதனால் திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே பெரும் இழப்பு ஏற்படும். இதை கட்சிதான் உணர்ந்து முடிவு செய்யவேண்டும், என்றார் கோவிந்தசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


