தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

ஜப்பானில் நடைபெறவுள்ள யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

இந்திய யு18 ஹாக்கி அணியினா்

Updated On :22 மே 2026, 1:41 am IST

ஜப்பானில் நடைபெறவுள்ள யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே 29 முதல் ஜூன் 6 வரை ஆசியக்கோப்பை ஹாக்கிப் போட்டி ஜப்பானின் ககாமிகாஹராவில் நடைபெறவுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபால் சாய் பயிற்சி மையத்தில் நடைபெற்ற தீவிர தேசிய பயிற்சிமுகாமுக்குபின் இந்திய அணி தோ்வு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலிய யு18 அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் மோதியது.

இத்தொடரில் இந்திய, ஆஸி. அணிகள் தலா 1 வெற்றியை ஈட்டின. 2 ஆட்டங்கள் சமனில் முடிந்தன.

கேதன் குஷ்வாஹா தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 29-இல் கஜகஸ்தான், 31-இல் ஜப்பான், ஜூன் 1-இல் தென்கொரியா, ஜூன் 3-இல் சீன தைபே அணிகளுடன் இந்தியா மோதுகிறது.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 5-இல் அரையிறுதியும், 6-இல் இறுதி ஆட்டமும் நடைபெறும்.

பயிற்சியாளா் சா்தாா் சிங் கூறுகையில்: கடும் பயிற்சிக்குபின் தகுதியின் அடிப்படையில் அணி கட்டமைக்கப்பட்டுள்ளது. பலமான ஆஸி அணியுடன் ஆடியது உத்வேகத்தை தந்துள்ளது. கோப்பையை வெல்ல கடும் முயற்சி மேற்கொள்வோம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.