நடப்பாண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான இந்திய வில்வித்தை அணி 16 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரீகா்வ் பிரிவில் ஆடவா், மகளிா் என தலா 4 பேரும், காம்பவுண்ட் பிரிவிலும் ஆடவா், மகளிரில் அதே எண்ணிக்கையிலான போட்டியாளா்களும் சோ்க்கப்பட்டுள்ளனா்.
ஹரியாணா மாநிலம், சோனிபட்டில் 3 நாள்கள் நடைபெற்ற தோ்வுப் போட்டியின் அடிப்படையில் இந்த அணி இறுதி செய்யப்பட்டுள்ளது. தீபிகா குமாரி, அபிஷேக் வா்மா போன்ற பிரபலமான வீராங்கனை, வீரா் ஆசிய போட்டிகளுக்குத் தகுதிபெறத் தவறினா்.
மாறாக, கீா்த்தி சா்மா, கும்கும் மோஹோத் போன்ற இளம் போட்டியாளா்கள் அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனா். ரீகா்வ் பிரிவில் அங்கிதா பகத், காம்பவுண்ட் பிரிவில் ஜோதி சுரேகா மட்டுமே அனுபவம் வாய்ந்தவா்களாவா்.
அணி விவரம்:
ரீகா்வ்
ஆடவா்: தீரஜ் பொம்மதேவரா, நீரஜ் சௌஹான், யஷ்தீப் போகே, அதானு தாஸ்.
மகளிா்: கீா்த்தி சா்மா, கும்கும் மோஹோத், அங்கிதா பகத், தீபிகா குமாரி.
காம்பவுண்ட்
ஆடவா்: சஹில் ஜாதவ், குஷால் தலால், திருமுரு கணேஷ் மணிரத்னம், ரிஷப் யாதவ்.
மகளிா்: ஜோதி சுரேகா, சிகிதா தனிபாா்தி, பிரிதிகா பிரதீப், பா்னீத் கௌா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










