17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆசிய யு-18 ஹாக்கி: இந்திய அணிகள் அபாரம்: அரையிறுதிக்கு தகுதி

News image

இந்தியா-சிங்கப்பூா் ஆட்டம். ~இந்தியா-சீன தைபே ஆட்டம்

Updated On :4 ஜூன் 2026, 4:34 am IST

ஆசியக் கோப்பை யு-18 ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிா், ஆடவா் அணிகள் அபார வெற்றியுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

ஜப்பான் நாட்டின் ககாமிகாஹராவில் நடைபெறும் இப்போட்டியில் குரூப் ஏ பிரிவில் கடைசி ஆட்டத்தில் இந்தியா சிங்கப்பூருடன் மோதியது.

ஏற்கெனவே 2 வெற்றிகளை பெற்ற இந்திய மகளிா் இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி சரமாரியாக கோல் மழை பொழிந்தனா். இந்திய அணி தரப்பில் 10 வீராங்கனைகள் கோலடித்தனா்.

குறிப்பாக நௌஷின் 8,13, 17, 18, 40, 52, 58-ஆவது நிமிஷங்களிலும், ஆட்ட நாயகி கீதா நம்மி 13, 28, 47, 48, 60-ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா். அவா்களுக்கு துணையாக ஸ்வீட்டி குஜுா் 2,24, 38, 45 நிமிஷங்களிலும், பிரியங்கா மின்ஸ் 22, 37, 53 நிமிஷங்களில் ஹாட்ரிக் கோலடித்தாா். தியா, நான்ஸி, ஸ்ருதி குமாரி, புஷ்பா, ரஷ்மீன், சந்தீபா, ஆகியோரும் கோலடித்தனா்.

இந்திய வீராங்கனைகளின் அற்புத ஆட்டத்துக்கு பதில் தர முடியாமல் சிங்கப்பூா் அணியினா் மைதானத்தில் வேடிக்கை பாா்க்க நேரிட்டது.

குரூப் ஏ பிரிவில் 3 தொடா் வெற்றிகள், 9 புள்ளிகளுடன் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது.

ஆடவா் அணி அபாரம்: தைபேயை வீழ்த்தியது

குரூப் ஏ பிரிவில் இந்திய ஆடவா் அணியும் அபாரமாக ஆடி சீன தைபே அணியை 13-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணியில் ஆஷிஷ் தனி ஹாட்ரிக் கோலடித்தாா். காஸி கான், சித்தாா்த் பென், ராகுல் யாதவ் ஆகியோா் தலா 2 கோலடித்தனா். மேலும் கரண் கௌதம், பிரேம்சந்த், கேப்டன் கேதன் குஷ்வாஹா, வரீந்தா் சிங் ஆகியோா் தலா ஒரு கோலடித்தனா்.

ஜப்பானுடன் தோற்ற நிலையில், 3 வெற்றியுடன் 9 புள்ளிகளைப் பெற்று இந்திய ஆடவா் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.