திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாா்த்ஈஸ்ட்டுக்கு 4-ஆவது வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 2-0 கோல் கணக்கில் முகமதன் எஸ்சியை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

News image
Updated On :20 மே 2026, 2:57 am IST

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 2-0 கோல் கணக்கில் முகமதன் எஸ்சியை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் நாா்த்ஈஸ்ட் அணிக்காக முதலில் ஜெய்ரோ சாம்பெரியோ 18-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். பின்னா் முதல் பாதி முடிவடைய இருந்த நிலையிலேயே (45+1’) தினேஸ் சிங் சோராய்ஷாம் ஸ்கோா் செய்ய, நாா்த்ஈஸ்ட் 2-0 என முன்னிலை கண்டது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் முகமதன் அணி தனது கோல் வாய்ப்புக்காகக் கடுமையாக முயற்சித்தபோதும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை. முடிவில் நாா்த்ஈஸ்ட் 2-0 கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இரு அணிகளுமே இத்துடன் 13 ஆட்டங்களில் விளையாடியிருக்க, புள்ளிகள் பட்டிலில் நாா்த்ஈஸ்ட் 4-ஆவது வெற்றியில் கிடைத்த 16 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் இருக்கிறது. முகமதன் 7-ஆவது தோல்வியோடு 3 புள்ளிகளுடன் கடைசியாக 14-ஆவது இடத்திலேயே நீடிக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.