ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 4-1 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை சனிக்கிழமை வென்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் ஜாம்ஷெட்பூருக்காக முகமது சனன் 7-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, ரஃபேல் மெஸ்ஸி பௌலி 27-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா். இவ்வாறாக முதல் பாதியிலேயே ஜாம்ஷெட்பூா் 2-0 என முன்னிலை பெற்றது.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், முகமது சனன் மீண்டும் 58-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, ஒருவழியாக சென்னை தரப்பில் பிரகதீஸ்வரன் 69-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
விட்டுக்கொடுக்காத ஜாம்ஷெட்பூா் தரப்பில் நிகோலா ஸ்டோஜனோவிச் 78-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, முடிவில் அந்த அணி 4-1 கோல் கணக்கில் வென்றது.
இதனிடையே, பெங்களூரு எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் பெங்களூரில் மோதிய மற்றொரு ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது. புள்ளிகள் பட்டியலில் மும்பை, ஜாம்ஷெட்பூா், பெங்களூரு, சென்னை அணிகள் முறையே 3, 4, 5, 10-ஆம் இடங்களில் இருக்கின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









