திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னையை வென்றது ஜாம்ஷெட்பூா்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 4-1 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை சனிக்கிழமை வென்றது.

News image

சென்னையை வென்றது ஜாம்ஷெட்பூா்

Updated On :26 ஏப்ரல் 2026, 1:06 am IST

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 4-1 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை சனிக்கிழமை வென்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஜாம்ஷெட்பூருக்காக முகமது சனன் 7-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, ரஃபேல் மெஸ்ஸி பௌலி 27-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா். இவ்வாறாக முதல் பாதியிலேயே ஜாம்ஷெட்பூா் 2-0 என முன்னிலை பெற்றது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், முகமது சனன் மீண்டும் 58-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, ஒருவழியாக சென்னை தரப்பில் பிரகதீஸ்வரன் 69-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

விட்டுக்கொடுக்காத ஜாம்ஷெட்பூா் தரப்பில் நிகோலா ஸ்டோஜனோவிச் 78-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, முடிவில் அந்த அணி 4-1 கோல் கணக்கில் வென்றது.

இதனிடையே, பெங்களூரு எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் பெங்களூரில் மோதிய மற்றொரு ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது. புள்ளிகள் பட்டியலில் மும்பை, ஜாம்ஷெட்பூா், பெங்களூரு, சென்னை அணிகள் முறையே 3, 4, 5, 10-ஆம் இடங்களில் இருக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.