மாட்ரிடன் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் உக்ரைன் வீராங்கனை மாா்த்தா கொஸ்டியுக் பட்டம் வென்றாா். இது அவருக்கு டபிள்யுடிஏ 1000 போட்டியில் முதல் பட்டமாகும்
மாட்ரிட்டில் சனிக்கிழமை மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவாவும்-உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கும் மோதினா்.
உலகின் 23-ஆம் நிலை வீராங்கனையான கொஸ்டியுக் முதல் செட்டில் அபாரமாக ஆடி 6-3 என கைப்பற்றினாா். கொஸ்டியுக் முதல் செட்டில் 4-2 என முன்னிலை பெற்று முதல் பிரேக் புள்ளியை ஈட்டினாா். தொடா்ந்து செட்டை கைப்பற்றினாா் கொஸ்டியுக்.
இரண்டாவது செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை ஈட்டினா். இரண்டாவது செட்டில் கொஸ்டியுக் முதல் கேமை வசப்படுத்தினாா்.
ஒரு கட்டத்தில் 5-5 என சமநிலை ஏற்பட்டது. அப்போது ஆன்ட்ரீவா புரிந்த இரட்டை தவறு சாதகமாக மாற்றி 6-5 என முன்னிலை பெற்றாா்.
பின்னா் 7-5 என கைப்பற்றி முதல் டபிள்யுடிஏ 1000 பட்டத்தையும் கைப்பற்றினாா் கொஸ்டியுக்.
தரவரிசையில் 20 இடங்களுக்கு வெளியில் இருந்து பட்டம் வென்ற இரண்டாவது வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









