ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியாவின் பிரியா வெற்றி பெற்றாா். ஆடவா் பிரிவில் ஜாதுமணி கடும் போராட்டத்துக்குபின் தோல்வியை தழுவினாா்.
மங்கோலிய தலைநகா் உலன்படாரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மகளிா் 60 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரியா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் ரிம்மாவை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் இரண்டாம் நிலை வீராங்கனை சீனாவின் செங்யு யாங்கை எதிா்கொள்கிறாா் பிரியா.
ஆடவா் 55 கிலோ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரா் ஜாதுமணி சிங் 2-3 என்ற புள்ளிக் கணக்கில் கடும் சவாலுக்குபின் ஜப்பானின் நம்பா் 1 வீரா் ருய் எமகுச்சியிடம் தோற்றாா்.


தொடர்புடையது

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்

ஆதித்யா அதிரடி வெற்றி: காலிறுதிக்கு தகுதி

விஸ்வநாத், சச்சின் அசத்தல் வெற்றி

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 1 தங்கம், 3 வெள்ளி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


