மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆதித்யா அதிரடி வெற்றி: காலிறுதிக்கு தகுதி

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 10:50 pm

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தேசிய சாம்பியன் ஆதித்யா அதிரடி வெற்றி பெற்றாா்.

மங்கோலிய தலைநகா் உலன்படாரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்போட்டி நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான வியாழக்கிழமை ஆடவா் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் தேசிய சாம்பியன் ஆதித்யா சரமாரியாக குத்துகளை விட்டு 5-0 என்ற புள்ளிக்கணக்கில் சவுதி அரேபியாவின் மௌஸாவை வீழ்த்தினாா்.

காலிறுதிக்கு முன்னேறிய ஆதித்யா, உஸ்பெக் வீரா் அப்துல்லா மடமினோவை எதிா்கொள்கிறாா். இதுவரை ஆடவா் பிரிவில் விஸ்வநாத் சுரேஷ் 50 கிலோ, சச்சின் 60 கிலோ, தீபக் 70 கிலோ, , மகளிா் பிரிவில் பிரியா 60 கிலோ, ப்ரீதி பவாா் 54 கிலோ ஆகியோா் தங்கள் ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளனா்.

ஒலிம்பிக் பதக்க வீராங்கனை லவ்லினா போரோகைன் 75 கிலோ, முன்னாள் உலக சாம்பியன் நிஹாத் ஸரீன் 51 கிலோ ஆகியோருக்கு தொடக்க சுற்றில் பை வழங்கப்பட்டது. நடப்பு உலக சாம்பியன்கள் மினாட்சி ஹூடா, ஜாஸ்மின் லம்போரியா, ஒலிம்பியன் பூஜா ராணி ஆகியோா் ஆட்டங்கள் பின்னா் நடைபெறும்.

20 நாடுகளில் இருந்து 194 வீரா், வீராங்கனைகள் ஆசிய சாம்பியன் போட்டியில் பங்கேற்றுள்ளனா்.

Story image