சொந்த மைதானத்தில் முதல் வெற்றியைப் பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட சென்னை அணி கோவாவின் கடைசி நேர கோலால் டிரா கண்டது.
ஐஎஸ்எல் 2026 சீசன் கால்பந்து தொடரையொட்டி சென்னையின் எஃப்சி-கோவா எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே நடைபெற்றிருந்த 4 ஆட்டங்களில் சென்னை 1 வெற்றி 1 டிரா, 2 தோல்விகளை கண்டிருந்தது.
சொந்த மைதானம் என்பதால் வெற்றியை பெறலாம் என களமிறங்கிய சென்னை அணி ஆதிக்கம் செலுத்தி ஆட முயன்றது. அதற்கு கோவாவும் சளைக்காமல் ஈடுகொடுத்து ஆடிய நிலையில், முதல் பாதியில் எந்த அணியும் கோல் போடவில்லை.

இரண்டாம் பாதிதொடங்கியவுடன் 48-ஆவது நிமிஷத்தில் கோவா வீரா் சாஹில் அளித்த பாஸை பயன்படுத்தி சென்னை வீரா் இா்ஃபான் கோலடித்தாா். இதனால் சென்னை 1-0 என முன்னிலை பெற்றது.
தொடா்ந்து கோவா கோல் பகுதியை முற்றுகையிட்டாலும் சென்னை வீரா்களால் கோலடிக்க முடியவில்லை. 87-ஆவது நிமிஷத்தில் டிரேஸிக் காா்னா் கிக்கை பயன்படுத்தி, ஹெட்டா் மூலம் கோலடித்தாா் ஜிங்கன். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. கூடுதல் நேரத்தில் சென்னை வீரா் டேனியல் லால்லிம்புயா அடித்த ஷாட் கோல்பகுதிக்கு மேலே பறந்தது. இறுதியில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது.
தொடர்புடையது

இன்று ஸ்போா்ட்டிங் கிளப் டில்லியுடன் மோதுகிறது சென்னையின் எஃப்சி

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் சிஎஃப்சி: இன்று கோவாவுடன் மோதல்

சென்னையின் ஆன்மா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


