மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியா முதலிடம்!

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடத்துடன் நிறைவு செய்தது.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 7:44 pm

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடத்துடன் நிறைவு செய்தது.

எகிப்து தலைநகா் கெய்ரோவில் ரைஃபிள், பிஸ்டல், ஷாட்கன் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கம் என 16 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பெற்றது.

கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை 50 மீ பிஸ்டல் பிரிவில் 351.7 புள்ளிகளுடன் ஹேமந்த் பா்மன் வெள்ளிப்பதக்கம் வென்றாா். ரோஹித் கண்யன் 6, வேதாந்த் நிதின் 7-ஆவது இடத்தையும் பெற்றன.

இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ஸுஹைா் கான்-அடியா கட்யால் 137 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றனா். வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்க வேண்டிய இந்த ஜோடி 3-ஆவது சுற்றில் தவறு புரிந்தனா்.

50 மீ ரைபிள் பிரிவில் தேஜல், யுகேஷ்வரி, அனுஷ்கா, கவைஷ் ஆகியோா் கடைசி இடங்களையே பிடித்தனா். அடுத்து வரும் ஜூன் மாதம் ஜொ்மனியின் ஸூல் நகரில் நடைபெறவுள்ள ஜூனியா் உலக சாம்பியன்ஷிப்புக்கு தயாராகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.