மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 பதக்கங்கள்

எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்தன.

News image

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்

Updated On :22 ஏப்ரல் 2026, 12:26 am

எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் செவ்வாய்க்கிழமை கிடைத்தன.

10 மீட்டா் ஏா் பிஸ்டல் ஜூனியா் ஆடவா் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் சிவா நா்வால் 241.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். மற்றொரு இந்தியரான சிராக் சா்மா 218.9 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றாா்.

உஸ்பெகிஸ்தானின் சோடிஜோன் அப்துல்லாயேவ் 240 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றாா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான அபினவ் தேஷ்வால் 136.7 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்தாா்.

10 மீட்டா் ஏா் ரைஃபில் ஜூனியா் மகளிா் இறுதிச்சுற்றில், இந்தியாவின் பனா புக்ரா 250.6 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா். பிரான்ஸின் ஆன்செலின் பிராக்மேன் தங்கத்தை தட்டிச் செல்ல (252), சக நாட்டவரான ஹெலெனா ஈகால் வெண்கலம் (228.5) பெற்றாா்.

களத்திலிருந்த இதர இந்தியா்களில், சாம்பவி ஷ்ரவன் 206.5 புள்ளிகளுடன் 4-ஆம் இடமும், அன்வில் ரத்தோட் 164.6 புள்ளிகளுடன் 6-ஆம் இடமும் பெற்ரனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.