மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ஒரு வாரத்தில் உலகக் கோப்பை: அவசரமாக நாடு திரும்பும் தென்னாப்பிரிக்க கேப்டன்!

சொந்த காரணங்களுக்காக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்தியாவிலிருந்து மீண்டும் நாடு திரும்புகிறார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:03 am

DIN

சொந்த காரணங்களுக்காக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்தியாவிலிருந்து மீண்டும் நாடு திரும்புகிறார்.

உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி தனது முதன்மையானப் போட்டிக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது. நாளை (செப்டம்பர் 29) நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும், அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியையும் தென்னாப்பிரிக்க அணி எதிர்கொள்கிறது. இந்த நிலையில், சொந்த காரணங்களுக்காக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்தியாவிலிருந்து மீண்டும் நாடு திரும்பியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறியதாவது: தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளார். பயிற்சி ஆட்டங்களில் அணியை மார்கரம் வழிநடத்துவார். அக்டோபர் 7  ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டெம்பா பவுமா மீண்டும் அணியில் இணைவார் எனக் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.