சொந்த காரணங்களுக்காக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்தியாவிலிருந்து மீண்டும் நாடு திரும்புகிறார்.
உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி தனது முதன்மையானப் போட்டிக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது. நாளை (செப்டம்பர் 29) நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும், அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியையும் தென்னாப்பிரிக்க அணி எதிர்கொள்கிறது. இந்த நிலையில், சொந்த காரணங்களுக்காக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்தியாவிலிருந்து மீண்டும் நாடு திரும்பியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: உலகக் கோப்பையை எங்களால் வெல்ல முடியும்: ககிசோ ரபாடா
இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறியதாவது: தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளார். பயிற்சி ஆட்டங்களில் அணியை மார்கரம் வழிநடத்துவார். அக்டோபர் 7 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டெம்பா பவுமா மீண்டும் அணியில் இணைவார் எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

அம்மன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 20 போ் காயம்

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

