2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அம்மன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 20 போ் காயம்

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா்.

News image
ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயற்சித்த மாடுபிடி வீரா்கள்- (கோப்புப் படம்)
Updated On :23 பிப்ரவரி 2026, 9:57 pm

Syndication

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை பொன்னமராவதி வட்டாட்சியா் எம்.சாந்தா

கொடியசைத்து தொடங்கிவைத்தாா். தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதையடுத்து

பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த 978 காளைகள் பங்கேற்றன. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்று அடக்கினா்.

போட்டியில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும்

ரொக்கம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. போட்டியில் காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் மருத்துவக் குழுவினா் சிகிச்சையளித்தனா். பொன்னமராவதி வருவாய்த் துறையினா் போட்டியை ஒருங்கிணைத்தனா். பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் தங்கராமன் தலைமையிலன போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.