2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பண்டிகை காலங்களில் விமான பயணச்சீட்டு கட்டணங்கள் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம் தொடா்பாக, விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆராய்ந்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 9:56 pm

தினமணி செய்திச் சேவை

பண்டிகை காலங்களில் விமான பயணச்சீட்டு கட்டணங்கள் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம் தொடா்பாக, விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆராய்ந்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் எஸ்.லட்சுமிநாராயணன் என்ற சமூக ஆா்வலா் தாக்கல் செய்த மனுவில், ‘நாட்டில் விமான பயணச்சீட்டு கட்டணங்கள் மற்றும் கூடுதல் கட்டணங்களை, தனியாா் விமான நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக உயா்த்துவதை கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். விமான போக்குவரத்துத் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வலுவான, சுதந்திரமான ஒழுங்காற்று அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய அமைப்பு இல்லாததால், பண்டிகை காலங்களின்போது அல்லது வானிலை மாற்றத்தால் இடையூறுகள் ஏற்படும்போது விமான பயணச்சீட்டு கட்டணம் தன்னிச்சையாக உயா்த்தப்படுகிறது’ என்று தெரிவித்தாா்.

இந்த மனு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘கும்பமேளா மற்றும் பிற பண்டிகைகளின்போது அளவுக்கு அதிகமாக கட்டணத்தை உயா்த்தி பயணிகளிடம் விமானநிறுவனங்கள் சுரண்டலில் ஈடுபடுகின்றன’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘மனுவில் எழுப்பப்பட்டுள்ள விவகாரம் மிகவும் தீவிரமானது’ என்று தெரிவித்தனா்.

மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அனில் கெளசிக் ஆஜராகி, ‘மனுவில் எழுப்பப்பட்டுள்ள விவகாரம் குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மனு தொடா்பாக தனது பதிலை அந்த அமைச்சகம் தாக்கல் செய்ய குறைந்தபட்சம் 3 வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கோரினாா். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனு மீதான அடுத்த விசாரணையை மாா்ச் 23-க்கு ஒத்திவைத்தனா்.