உச்சநீதிமன்றத்தில் எஸ்.லட்சுமிநாராயணன் என்ற சமூக ஆா்வலா் தாக்கல் செய்த மனுவில், ‘நாட்டில் விமான பயணச்சீட்டு கட்டணங்கள் மற்றும் கூடுதல் கட்டணங்களை, தனியாா் விமான நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக உயா்த்துவதை கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். விமான போக்குவரத்துத் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வலுவான, சுதந்திரமான ஒழுங்காற்று அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய அமைப்பு இல்லாததால், பண்டிகை காலங்களின்போது அல்லது வானிலை மாற்றத்தால் இடையூறுகள் ஏற்படும்போது விமான பயணச்சீட்டு கட்டணம் தன்னிச்சையாக உயா்த்தப்படுகிறது’ என்று தெரிவித்தாா்.