இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸாகா அஷ்ரஃப், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிடமிருந்து வரும் அழைப்புகளுக்கும், குறுஞ்செய்திகளுக்கும் பதில் அளிப்பதில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தின்படி வீரர்களுக்கு 4-5 மாதங்களுக்கான ஊதியம் நிலுவையில் உள்ளது. வீரர்கள் அவர்களுக்கான ஊதியத்தினைப் பெறவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பாபர் அசாமின் அழைப்புகளை எடுப்பதில்லை. இந்த நிலையில், பாகிஸ்தானிடமிருந்து எந்த மாதிரியான ஆட்டத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றார்.