2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ரஷித் கானின் அச்சுறுத்தலான பந்துவீச்சை முறியடித்து விட்டோம்: நியூசிலாந்து வீரர்!

ரஷித் கானின் பந்துவீச்சு அச்சுறுத்தலை வெற்றிகரமாக முறியடித்துவிட்டதாக நியூசிலாந்து அணியின் கிளன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:11 am

DIN

ரஷித் கானின் பந்துவீச்சு அச்சுறுத்தலை வெற்றிகரமாக முறியடித்துவிட்டதாக நியூசிலாந்து அணியின் கிளன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (அக்டோபர் 19) நடைபெற்றப் போட்டியில் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 71 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஆட்டநாயன் விருதும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ரஷித் கானின் பந்துவீச்சு அச்சுறுத்தலை வெற்றிகரமாக முறியடித்துவிட்டதாக நியூசிலாந்து அணியின் கிளன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிளன் பிலிப்ஸ் பேசியதாவது: ரஷித் கானின் பந்துவீச்சை எதிர்கொள்ள நாங்கள் ஒவ்வொருவரும் எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த திட்டத்தைத் தீட்டினோம். சில நேரங்களில் போட்டி அவருக்கு சாதகமான நாளாக மாறிவிடும். எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும் அவரது நம்பமுடியாத அசாத்திய பந்துவீச்சினால் பேட்ஸ்மேன்களை திணறடிப்பார். அவரது பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக விளையாடிவிட்டால், மற்ற பந்துவீச்சாளர்களை எதிர்த்து சிறப்பாக விளையாடலாம். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசக் கூடியவர்கள். ரஷித் கான் இன்று நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக பந்துவீசினார். இருப்பினும், அவரது பந்துவீச்சு அச்சுறுத்தலை வெற்றிகரமாக நாங்கள் முறியடித்துவிட்டோம் என நம்புகிறேன் என்றார்.

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 10 ஓவர்கள் வீசிய ரஷித் கான் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.