டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

போட்டி தொடங்கும் முன்பு நான் கூறியது இதுதான்: சதம் விளாசிய ஆப்கன் வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் போல பேட் செய்வேன் எனக் கூறியதாக ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஸத்ரான் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:18 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் போல பேட் செய்வேன் எனக் கூறியதாக ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஸத்ரான் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது. அந்த அணியில் இப்ராஹிம் ஸத்ரான் அதிகபட்சமாக 129 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆப்கானிஸ்தான் அணிக்காக உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் போல பேட் செய்வேன் எனக் கூறியதாக இப்ராஹிம் ஸத்ரான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கரிடம் பேசினேன். அவர் அவரது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நான் சச்சின் டெண்டுல்கர் போல விளையாடுவேன் எனக் கூறினேன். சச்சினிடம் பேசியது எனக்கு அதிக ஆற்றலையும், நம்பிக்கையையும்  கொடுத்தது. ஆப்கானிஸ்தான் அணிக்காக உலகக் கோப்பையில் முதல் வீரராக சதம் விளாசியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக எனது கடின உழைப்பை வழங்கியுள்ளேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன். அப்போது எனது பயிற்சியாளரிடம் அடுத்த மூன்று போட்டிகளுக்குள் நான் சதமடிப்பேன் எனக் கூறினேன். நாங்கள் விக்கெட்டுகளை இழக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் 300 ரன்களைக் கடந்திருப்போம். போட்டியின் இறுதிக் கட்டத்தில் ரஷித் கான் சிறப்பாக விளையாடினார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.