டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

‘இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எப்படி?’- டிப்ஸ் கொடுத்த அஸ்வின்! 

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்தியாவில் டெஸ்ட் போட்டியை எப்படி விளையாட வேண்டுமென டிப்ஸ் கொடுத்துள்ளார்.

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2024, 6:36 am

DIN

இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டியில் 2-0 என் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. ஆஸி. அணி டெஸ்டில் சொதப்புவதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்திய மண்ணில் எப்படி விளையாட வேண்டுமென தெரியவில்லை என முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

3வது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் பாட் கம்மின்ஸ் பங்கேற்கமாட்டார். அவருக்கு பதில் ஸ்மித் கேப்டனாக செயல்படுவாரென தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இந்திய ஆல் ரவுண்டர் ரவிசந்திரன் அஸ்வின் ஆஸி. பேட்டர்களுக்கு இந்திய மண்ணில் எப்படி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டுமென தனது யூடியூப் பக்கத்தில் டிப்ஸ் கூறியுள்ளார். அஸ்வின் ஐசிசி பவுலர்  மற்றும் ஆல் ரவுண்டர் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் கூறியதாவது: 

ஆஸி. பேட்டர்களுக்கு இந்தியாவில் எப்படி விளையாட வேண்டுமென தெரியவில்லை. இலங்கை அல்லது பாகிஸ்தானில் அந்த நாடு முழுவதும் ஒரே வகையிலான பிட்ச்தான் இருக்கும். ஆனால் இந்தியா அப்படியல்ல. துணைக்கண்டம். வேற்றுமையில் ஒற்றுமை என்பது போல இங்கு மக்கள் இருக்கிறார்கள். இங்கு பல விதமான இடங்களில் பிட்ச் வெவ்வேறாக இருக்கும். கிழக்கில் ஒருமாதிரி, வடக்கில் ஒருமாதிரி. வெயிலுக்கு முன்பு ஒருமாதிரி வெயிலுக்கு பின்பு வேறொருமாதிரி இருக்கும். ஆடுகளத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும். எப்போதும் அதிரடியாக விளையாட முடியாது. தேவையான நேரத்தில் தடுப்பாட்டம் ஆட வேண்டும். டெஸ்ட் போட்டி என்றால் அதுதானே. பொறுமை அவசியம். பலவிதமான நேரங்களில் ஏற்படும் அழுத்தங்களை தாங்க வேண்டும். அதனால்தான் இதற்கு டெஸ்ட் போட்டி. காலை வெயிலில் விக்கெட் இழக்காமல் விளையாடினால் பின்பு ஆடுகளம் சரியாகிவிடும். பிறகு அதிரடியாகக்கூட விளையாடலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.