பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தால் நியூஸிலாந்து ஏ அணியை எளிதாக வீழ்த்திய இந்திய ஏ அணி!

நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய ஏ அணி, முதல் அதிகாரபூர்வமற்ற ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

News image
Updated On :22 ஜனவரி 2020, 5:57 am

நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய ஏ அணி, முதல் அதிகாரபூர்வமற்ற ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

லின்கால்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஒரு நியூஸிலாந்து ஏ அணி பேட்ஸ்மேனும் அரை சதமெடுக்க முடியாத அளவுக்கு இந்திய ஏ அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. ரவிந்திரா 49 ரன்களும் கேப்டன் புரூஸ் 47 ரன்களும் எடுத்தார்கள். சிராஜ் 3 விக்கெட்டுகளும் கலீல் அஹமது, அக்‌ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இதன்பிறகு பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடியதால் 29.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்திய ஏ அணி. பிரித்வி ஷா 35 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்களும் சஞ்சு சாம்சன் 21 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் எடுத்து இந்திய அணி எளிதில் வெற்றி பெற உதவினார்கள். சூர்யகுமார் யாதவும் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.