2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தால் நியூஸிலாந்து ஏ அணியை எளிதாக வீழ்த்திய இந்திய ஏ அணி!

நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய ஏ அணி, முதல் அதிகாரபூர்வமற்ற ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:34 pm

எழில்

நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய ஏ அணி, முதல் அதிகாரபூர்வமற்ற ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

லின்கால்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஒரு நியூஸிலாந்து ஏ அணி பேட்ஸ்மேனும் அரை சதமெடுக்க முடியாத அளவுக்கு இந்திய ஏ அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. ரவிந்திரா 49 ரன்களும் கேப்டன் புரூஸ் 47 ரன்களும் எடுத்தார்கள். சிராஜ் 3 விக்கெட்டுகளும் கலீல் அஹமது, அக்‌ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இதன்பிறகு பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடியதால் 29.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்திய ஏ அணி. பிரித்வி ஷா 35 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்களும் சஞ்சு சாம்சன் 21 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் எடுத்து இந்திய அணி எளிதில் வெற்றி பெற உதவினார்கள். சூர்யகுமார் யாதவும் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.