பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ரஞ்சி: இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தமிழக அணி!

இந்த வருட ரஞ்சிப் போட்டியில் தமிழக கிரிக்கெட் அணி தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2020, 12:07 pm

இந்த வருட ரஞ்சிப் போட்டியில் தமிழக கிரிக்கெட் அணி தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

5 ஆட்டங்களில் 5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்த தமிழக அணி, ரயில்வே அணியை இன்னிங்ஸ் வெற்றியுடன் வீழ்த்தி 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய ரயில்வே அணி, முதல் இன்னிங்ஸில் 76 ரன்களுக்குச் சுருண்டது. அஸ்வின், சித்தார்த் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 330 ரன்கள் எடுத்து அசத்தியது. முகுந்த் 100 ரன்களும் தினேஷ் கார்த்திக் 58 ரன்களும் எடுத்தார்கள். ஹர்ஷ் தியாகி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிறகு தனது 2-வது இன்னிங்ஸில் விளையாடிய ரயில்வே அணி, மீண்டும் மோசமாக பேட்டிங் செய்து 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 

இதனால் இந்த ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 7 புள்ளிகளைப் பெற்றது தமிழக அணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.