டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கோலி நன்றாக விளையாடி விடக்கூடாது என்பதற்காகத்தான் அவரை வம்பிழுக்கவில்லை: ஆஸி. கேப்டன் விளக்கம்

கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் ஐபிஎல் ஒப்பந்தத்துக்காக தற்போதைய ஆஸி. வீரர்கள் இந்திய கேப்டன் விராட் கோலியுடன்..

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:24 pm

எழில்

கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் ஐபிஎல் ஒப்பந்தத்துக்காக தற்போதைய ஆஸி. வீரர்கள் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதில்லை என்று ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் குற்றம் சாட்டினார். அதற்கு ஆஸி. டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் பதில் அளித்துள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் நல்லவிதமாக நடந்துகொண்ட ஆஸி. வீரர்கள் யாரையும் நான் பார்க்கவில்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை. பேட்டிங், பந்துவீச்சில் ஈடுபட்ட அனைவரும் ஆஸி. அணியின் வெற்றிக்காகவே உழைத்தார்கள். மற்றபடி கோலியிடம் யார் நட்பு பாராட்டினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது என்று மட்டும் முடிவெடுத்தோம். ஏனெனில் அப்படி நடந்தால் அதன்மூலம் சிறப்பாக விளையாட ஆரம்பிப்பார் கோலி.

அந்தத் தொடரில் பரபரப்பான தருணங்கள் பல இருந்தன. நாங்கள் யாரும் எதிலும் பின்வாங்கவில்லை. விராட் கோலிக்குப் பந்துவீசும்போது யாரும் ஐபிஎல் ஒப்பந்தத்தை எண்ணிப் பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.

சில நாள்களுக்கு முன்பு, ஒரு பேட்டியில் முன்னாள் கேப்டன் கிளார்க் கூறியதாவது:

வருமானத்தின் அடிப்படையில் சர்வதேச அளவிலும் உள்ளூரில் ஐபிஎல் அளவிலும் இந்திய அணி எந்தளவுக்குச் சக்திமிக்கது என்பதை அனைவரும் அறிவோம். ஆஸ்திரேலியாவும் இதர நாடுகளும் குறிப்பிட்ட காலத்தில் இந்திய அணிக்குப் பிடித்தது போல நடந்துகொண்டார்கள். கோலி மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு எதிராக களத்தில் வாக்குவாதம் செய்ய அஞ்சினார்கள். காரணம், அவர்களுடன் இணைந்துதான் ஐபிஎல்-லில் விளையாட வேண்டும் அல்லவா!

சிறந்த ஆஸ்திரேலிய வீரர்களை ஐபிஎல் அணிக்குத் தேர்வு செய்கிறார்கள். எனவே வீரர்களும், நான் கோலியுடன் வாக்குவாதம் செய்யப்போவதில்லை. அப்போதுதான் அவர் என்னை பெங்களூர் அணிக்கு ஆறு வாரக் காலத்துக்கு 1 மில்லியன் டாலருக்குத் தேர்வு செய்வார் என நினைக்கிறார்கள் என்று கிளார்க் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.