9 வீராங்கனைகளின் பெயர்களை விளையாட்டு அமைச்சகம் பத்ம விருதுகளுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷண் விருது பெற்றவர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பத்ம விருதுகளுக்கு தகுதியான நபர்களை பரிந்துரைகளை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணிகள், வர்த்தகம், தொழில்துறை போன்றவற்றில் சாதனை புரிந்தவர்களுக்காக பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இனம், ஜாதி, பணி, பாலினம் ஆகிய வேறுபாடுகளின்றி இந்த விருதுகளுக்கான சாதனையாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பிரதமர் தலைமையிலான பத்ம விருதுகள் தேர்வுக் குழு, விருதுக்கு தகுதியுடைய நபர்களை தேர்வு செய்கிறது.
இந்நிலையில் 9 வீராங்கனைகளின் பெயர்களை விளையாட்டு அமைச்சகம் பத்ம விருதுகளுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வினேஷ் போகத் (மல்யுத்தம்), ஹர்மன்ப்ரீத் கெளர் (கிரிக்கெட்), ராணி ராம்பால் (ஹாக்கி), சுமா ஷிருர் (துப்பாக்கிச் சுடுதல்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), இரட்டையர்கள் தஷி & நுங்ஷி மாலிக் (மலையேற்றம்) ஆகிய 7 வீராங்கனைகளும் பத்மஸ்ரீ விருதுகளுக்கும் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து பத்ம பூஷன் விருதுக்கும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பத்ம விபூஷன் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.
பத்ம விபூஷன் விருது இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் (2007), சச்சின் டெண்டுல்கர் (2008), மறைந்த மலையேற்ற வீரர் சர் எட்மண்ட் ஹிலாரி என மூன்று வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்முறையாக வீராங்கனை ஒருவரின் பெயர் பத்ம விபூஷன் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேரி கோம் 2006-ல் பத்மஸ்ரீ விருதும் 2013-ல் பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார்.
2020, ஜனவரி 25 அன்று பத்ம விருதுகளுக்குத் தேர்வானவர்களின் பட்டியல் அறிவிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


