2012-13 முதல் செளராஷ்டிரா அணி மூன்று தடவை ரஞ்சி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. எனினும் இந்திய ஏ அணிக்கு செளராஷ்டிர அணி வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டைக் கூறியுள்ளார் செளராஷ்டிர வீரர் ஷெல்டன் ஜாக்சன்.
ட்விட்டரில் அவர் கூறியதாவது: ரஞ்சி இறுதிப் போட்டிக்கு செளராஷ்டிர அணி தகுதி பெற்றது. எனினும் இந்திய ஏ அணி விளையாடும் தொடர்களில் செளராஷ்டிர வீரர்கள் இடம்பெறவில்லை. எனவே ரஞ்சி இறுதிப் போட்டியில் விளையாடுவதால் பலன் எதுவும் இல்லையா அல்லது சிறிய அணிகளின் சாதனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லையா? கடந்த 5 வருடங்களில் செளராஷ்டிரா அணி மூன்று தடவை ரஞ்சி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆனால் அதனால் எந்த வீரருக்கும் பலனில்லை. இதைக் கேள்வி கேட்கக்கூடாது என நான் அறிவுறுத்தப்பட்டுள்ளேன். ஆனால் இதற்கான காரணத்தைக் கேட்டு நாங்கள் எதில் பின்தங்குகிறோம் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன். இல்லாவிட்டால் எங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவு பெற்றுவிடும். இந்த விஷயத்தில் தேர்வுக்குழுவினர் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் துலீப் கோப்பைப் போட்டிக்கு ஷெல்டன் ஜாக்சன் தேர்வாகவில்லை. எனினும் செளராஷ்டிர அணியைச் சேர்ந்த தர்மேந்திரசிங் ஜடேஜா, உனாட்கட் போன்றோர் துலீப் கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார்கள். எனினும் இருவரும் தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணியில் தேர்வாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தானிய சேமிப்புக் கிடங்கில் இருந்து வெளியேறும் பூச்சிகள், வண்டுகள்! பொதுமக்கள் அவதி!
கடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வு
பேரவைத் தோ்தலில் வென்று காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாகும்! - செல்வப்பெருந்தகை

கோடங்கிபோல நடித்து பெண்ணிடம் தங்க நகை பறித்த இருவா் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


